×

கெஜ்ரிவால், சோரனை சிறையில் தள்ளுவோம்

புதுடெல்லி: முதல்வர்களான அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் என ஊழலில் ஈடுபட்ட எந்த ஒரு தலைவரையும் சிறையில் தள்ளுவோம் என பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்தார். பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று கூறுகையில்,‘‘டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் சம்மன்களை ஏற்று விசாரணையை சந்திக்காமல் தவிர்த்து வருகின்றனர். கெஜ்ரிவால் ஆனாலும், சோரனாக இருந்தாலும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கான விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும்.ஊழலில் ஈடுபட்ட தலைவர்கள் நாட்டின் மிக நேர்மையான மக்களை ஆட்சி செய்து வந்த காலம் மலையேறி விட்டது. ஊழலில் ஈடுபட்ட தலைவர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின்படி சிறை கம்பிகளுக்கு பின்னால் தான் அடைக்கப்பட வேண்டும் என்ற உறுதியோடு நாங்கள் இருக்கிறோம். தன் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றால், கெஜ்ரிவால் ஏன் நீதிமன்றத்தை அணுகவில்லை. இது போன்ற நாடகங்கள் இனி எடுபடாது. தனக்கு கை விலங்கு மாட்டப்படுவது நெருங்கி வருவதை அவரும் உணர்ந்துள்ளார்’’ என்றார்.

The post கெஜ்ரிவால், சோரனை சிறையில் தள்ளுவோம் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Soran ,New Delhi ,BJP ,Gaurav Bhatia ,Chief Ministers ,Arvind Kejriwal ,Hemant Soran ,Delhi ,Chief Minister ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்